வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்! No Fire Zone
கடந்த 12ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-08) மூன்றாவதும் இறுதியுமான தாக்குதலற்ற(No Fire Zone) பாதுகாப்புவலயம் இலங்கை அரசினால் அறிவிக்கப்படுகிறது.
ஜனவரி 21 இல் முதலாவது பாதுகாப்பு வலயத்தையும் பின்னர் பெப்ரவரி 12 இல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தையும்அறிவித்து, அதன்பின்னர் அவற்றின் மீது கொடூர தாக்குதல்களை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இறுதியாக இதே நாளில் 3 ஆவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்தது.
2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவானஅந்த நிலப்பரப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் நெரிசலாக நகர்த்தப்பட்டனர். வெறும் 10 நாட்கள் மட்டுமே அந்த வயம் நிலைத்திருக்கும் என்பதை அறிந்திராத மக்களாகஎஞ்சிய உயிர்களை கைகளில் பிடித்துக்கொண்டு முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனர்.

குலசேகரம்.சதீஷ்